கோவை அவினாசி சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனத்தின் டயர் திடீரென கழன்று தனியாக நீண்ட தூரம் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், பேருந்திற்குள் மாணவர்கள் இல்லாத நிலையில் டயர் கழன்று கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரமாக நிறுத்தப்பட்டது. இதில் நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.