காவலரை கார் ஏற்றி கொன்ற கும்பல் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2024-02-15 06:29 GMT

ஆந்திராவில் செம்மர கடத்தல் கும்பல் காரை ஏற்றி காவலரை கொன்ற வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஆந்திரா மாநிலம் குண்ட்ரவாரி பள்ளி அருகேயுள்ள சோதனை சாவடியில், செம்மர கடத்தல் தடுப்புப்பிரிவை சேர்ந்த காவலரான கணேஷ் என்பவர், செம்மர கடத்தல் கும்பலால் கார் ஏற்றி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திரா போலீசார் இருவரை கைது செய்த நிலையில், முக்கிய குற்றவாளியான ராமன் விழுப்புரம் 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, 15 நாள் காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்