லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றிய பிறகு தமிழகம் திரும்பிய இசையமைப்பாளர் இளையராஜா, முதலமைச்சர் ஸ்டாலினை, அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். வீட்டின் வாசலுக்கே வந்து வரவேற்று அழைத்துச் சென்ற முதல்வர் ஸ்டாலினிடம் தனது அனுபவத்தை இளையராஜா பகிர்ந்து கொண்டார். அரங்கேற்றத்தின்போது, இந்தியர்கள் பலரும் விசில் அடித்து ரசித்ததையும் முதலமைச்சரிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.