காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-18 00:57 GMT

முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, புதுச்சேரியில் பிரசாரம் ஓய்ந்தது....21 மாநிலங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு..

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், தனியார் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை...வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என விசாரணை...

முசிறியில் ஐஜேகே கட்சி அலுவலகம், மற்றும் தனியார் விடுதியில் வருமான வரித்துறை திடீர் சோதனை...3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நீடித்ததால், ஐஜேகே நிர்வாகிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்..

இன்று மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம்..தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்..

தமிழகத்தில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள், வெப் கேமரா முறையில் கண்காணிப்பு.பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று,சத்ய பிரதா சாகு தகவல்.....

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் எடுத்துச் செல்லக் கூடாது..தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்...

வாக்குப்பதிவுக்கு பின்னர் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும்....தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள்..... 

Tags:    

மேலும் செய்திகள்