"Drive and Drink தெரியுமா?" - போலீசுக்கே புது சட்டம் சொல்லி தந்த போதை வெறியர்.. காருக்குள் மட்டையாகி அலப்பறை

Update: 2023-05-22 07:33 GMT

சென்னையில், போதை தலைக்கேறிய நிலையில், சாலையில் நின்ற காருக்குள் இருந்த இளைஞரை, போலீசார், பெரும் பாடுபட்டு எழுப்பினர்.

புதுப்பேட்டை சாலையில் காரை ஆனில் இருப்பது கூட தெரியாமல், போதையில் இளைஞர் ஒருவர் மல்லாந்து உறங்கினார். அந்த காரை சுற்றி மற்ற வாகன ஓட்டிகள் கூடியதால் அந்த இடம் சற்று பரபரப்பு ஆனது. அதன் பின் போலீசார் காருக்குள் இருந்த போதை இளைஞரை எழுப்ப பல்வேறு முயற்சிகளை செய்தனர். அவரை எழுப்ப முடியாமல் தவித்த நிலையில்,பெரும் பாடுபட்டு எழுப்பினர். அப்போது, நான் டிரிங்கன் டிரைவ் (drink and drive) கிடையாது, டிரைவ் அண்ட் ட்ரிங்க் (drive and drink) என்று போலீசுக்கே புதிய சட்டம் சொல்லிக் கொடுத்தார். இதையடுத்து அந்த இளைஞர் மீது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வழக்கு பதியப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்