அழுகிய நிலையில் பெண்ணின் உடல்... விஷம் குடித்த கள்ளக்காதலன் - ஓசூரில் அதிர்ச்சி

Update: 2023-06-12 03:19 GMT

ஓசூர் அடுத்த சென்னசந்திரம் கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில், அழுகிய நிலையில் கிடந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை போலீசார் மீட்டனர். இதுதொடர்பான விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்த பெண், தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவரது மனைவி பூங்கொடி என தெரியவந்தது. உயிரிழந்த பெண்ணின் செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரித்ததில், கடைசியாக ஓசூர் அருகே உள்ள மாரச்சந்திரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசப்பா என்பவருடன் பேசியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரிக்க முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில், தன்னை போலீசார் தேடுவதை அறிந்த வெங்கடேசப்பா, வீட்டில் இருந்த களைக்கொல்லி விஷமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து போலீசார், சிகிச்சைக்குப் பிறகு வெங்கடேசப்பாவிடம், பூங்கொடி கொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்