இன்றைய தலைப்பு செய்திகள் (18-04-2023)

Update: 2023-04-18 13:58 GMT

கடலூர் மாநகராட்சி மேயரின் நேர்முக உதவியாளர் உட்பட இருவர் கைது...வீடு மற்றும் கடைகள் கட்டுவதற்கான அனுமதி வழங்க 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில் நடவடிக்கை....  

ஓசூரில், வாடகை வீட்டில் தங்கியிருந்த பீகார் இளைஞரை அடித்துக் கொலை....உடன் தங்கியிருந்த வடமாநில இளைஞர்கள் இருவருக்கு போலீசார் வலை....

குட்கா வழக்கில் தமிழக காவல்துறை முன்னாள் அதிகாரிகள் மீது விசாரணை நடத்துவதில் தாமதம்...மத்திய அரசு அளித்த அனுமதி கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

"மகிழ்ச்சி இல்லையேல் முடித்து கொள்வேன்"... வகிக்கும் பதவியில் எப்போது மகிழ்ச்சி இல்லையோ அப்போது தமது பணியை முடித்து கொள்வேன்....மாணவர்கள் மத்தியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு...

"இளைய பெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கம்"... ஒடுக்கப்பட்டோருக்காக பாடுபட்ட தலைவர் இளைய பெருமாளை போற்றும் வகையில், சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும்... - சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்