ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த விவசாயி... உதவி செய்வது போல் நடித்து கைவரிசை - சிசிடிவி காட்சிகளை வைத்து தட்டி தூக்கிய போலீசார்

Update: 2023-02-08 06:38 GMT

திண்டிவனம் பகுதியில், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கத் தெரியாதவர்களிடம், கைவரிசை காட்டி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

காட்ராம்பாக்கம் பகுதியை சேர்ந்த அருள் என்ற விவசாயி, நேரு வீதியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்துள்ளார்.

அப்போது, அங்கிருந்த நபரிடம் பணம் எடுத்துத் தருமாறு கூற, விவசாயியை ஏமாற்றி அந்த மர்மநபர் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

இதுதொடர்பான புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து, திருவள்ளுவர் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்