விபத்தை ஏற்படுத்தி கொலை செய்த கணவன்.. மனைவியின் இன்சூரன்சுக்காக கொடூர செயல்

Update: 2022-12-02 04:19 GMT

ஜெய்பூர் அருகே ஹர்மடாவில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஷாலு தேவி என்பவரும் அவரது உறவினர் ராஜூவும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சந்தேகம் இருப்பதாக ஷாலுவின் உறவினர்கள் புகார் அளித்த‌தால் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஷாலு தேவியின் இன்சூரஸ் பணமான ஒரு கோடியே 90 லட்சத்தை பெறுவதற்காக, அவரது கணவன் மகேஷ் சந்த் கூலிப்படையை ஏவி, போலியாக விபத்தை ஏற்படுத்தி கொலை செய்த‌து அம்பலமானது.

இதற்காக கூலிப்படைக்கு 10 லட்சம் ரூபாய் பேசி, ஐந்தரை லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இன்சூரன்ஸ் பணத்தை மகேஷ் சந்த் வாங்கிய நிலையில், அவரையும் கூலிப்படையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்