கண்டெய்னர் கிடங்கில் பயங்கர தீ; திடீரென 'வெடிவிபத்து' - 49 பேர் பரிதாப பலி

கண்டெய்னர் கிடங்கில் பயங்கர தீ; திடீரென 'வெடிவிபத்து' - 49 பேர் பரிதாப பலி

Update: 2022-06-06 02:51 GMT

சிட்டகாங் அருகே உள்ள கதம் ரசூல் பகுதியில் தனியார் கண்டெய்னர் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்ற போது, துரதிஷ்டவசமாக கிடங்கிற்குள் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மீட்புபணிகளுக்காக சென்ற தீயணைப்பு வீரர்களும் சிக்கினர். இந்த விபத்தில் 450 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிக்காக சென்ற 5 தீயணைப்புத்துறையினரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்தோர் சிட்டகாங்கில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஹெட்ரஜன் பெராக்சைடு ரசாயனம் இருந்த கண்டெய்னரில் ஏற்பட்ட ரசாயன எதிர்வினையால், தீ மற்ற இடங்களுக்கு பரவி நீண்ட நேரம் எரிந்த‌தாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்