"தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 4100 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை"

Update: 2023-06-30 14:52 GMT

தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்ட தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி 4100 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என வருமானவரித்துறை தகவல்..

கடந்த செவ்வாய்க்கிழமை தூத்துக்குடியில் தலைமை இடத்தில் காலையில் ஆரம்பித்து இரவு வரை வருமானவரித்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன

கடந்த ஐந்து வருடங்களில் கணக்குகளை ஆய்வு செய்த போது நிதி பரிவர்த்தனை அறிக்கையில் முறையாக கணக்கு காட்டப்படவில்லை என தெரியவந்துள்ளது

ரொக்க முதலீட்டில் பத்தாயிரம் வங்கி கணக்குகளில் 2700 கோடி ரூபாய் தொகையும், கிரெடிட் கார்டு தொடர்பான கணக்கு காட்டுதலில் 110 கோடி ரூபாயும், டிவைடெண்ட் முதலீட்டில் 200 கோடியும் மற்றும் பங்குகளில் 600 கோடியும், பொதுமக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய வட்டிகளில் 500 கோடி ரூபாயும் கணக்கு காட்டப்படவில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்