"யாருகிட்ட காசு கேக்குற " - கடை ஊழியரை விரட்டி விரட்டி தாக்கிய போதை கும்பல்

Update: 2023-01-19 21:55 GMT

சேலம் அருகே உணவு விடுதியில் வாங்கிய பொருளுக்கு பணம் கேட்ட கடை ஊழியரை போதை ஆசாமிகள் தாக்கிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தை சேர்ந்த ராஜா என்பவர் உணவு விடுதி மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த துரை மற்றும் சின்னத்தம்பி ஆகிய 2 பேரும் பொருட்களை வாங்கிவிட்டு சாப்பிட்டுள்ளனர். கடை ஊழியர் ரமேஷ் அதற்கான பணத்தை கேட்ட போது போதையில் இருந்த துரையும், சின்னத்தம்பியும் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவலறிந்து கடை ஊழியர் ராஜா வந்த போது அவரையும் தாக்கினர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்