வலையில் சிக்கிய ராட்சத யானை திருக்கை - மிரண்டுபோன மீனவர்கள்

Update: 2022-11-23 03:08 GMT

ராமேஸ்வரத்தில் ஒரு டன் எடையுள்ள யானை திருக்கை மீன், நாட்டுப் படகு மீனவர்கள் விலையில் சிக்கியது. பாம்பன் வடக்கு கடல் பகுதியில் சிக்கிய இந்த யானை திருக்கை மீனை, மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். அந்த மீன் பெண்ணினத்தை சேர்ந்த‌து என்றும், கருவுற்று இருந்த‌தாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். கரையில் வைக்கப்பட்டிருந்த மீனை அப்பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் பார்வையிட்டு சென்றனர். இதையடுத்து, 35 ஆயிரம் ரூபாய்க்கு யானை திருக்கை மீன் விற்கப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்