"பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட வேண்டும்..." மத்திய அரசுக்கு புதுச்சேரி எம்.பி.வைத்திலிங்கம் கோரிக்கை

Update: 2022-12-16 04:59 GMT

புதுச்சேரியில் உள்ள காட்டு நாயக்கர், மலைக்குறவர் ஏரிகுலா உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு புதுச்சேரி காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களவையில், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரும் சட்ட திருத்த மசோதா ​மீது பேசிய அவர், புதுவையில் காட்டு நாயக்கர் என சொல்லப்படும் பழங்குடியின சமூகம் காரைக்கால், மணவெளி, வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வசிப்பதாக குறிப்பிட்டார்.

இவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படாததால் அரசன் எந்த பயன்களையும் பெற முடியவில்லை என்றும் எனவே பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்