நாட்டை உலுக்கிய சைக்கோ கொலை - உண்மையை கக்க வைக்கும் Narco டெஸ்ட்

Update: 2022-11-19 06:01 GMT

காதலியை 35 துண்டுகளாக வெட்டிக் கொடூரமாக கொலை செய்த வழக்கில் கொலையாளி அஃப்தாபிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில், ஷ்ரதா மற்றும் அஃப்தாப் ஆகியோர் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில், ஷ்ரதாவை அவரது காதலன் அஃப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் வைத்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், கொலையாளி அஃப்தாஃபிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதையடுத்து, சோதனை நடத்தப்படுவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்