எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு - பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

Update: 2022-10-01 05:17 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் குடியிருப்பு மத்தியில் எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மேட்டுகாலனி பகுதியில் உள்ள ஜெய ஸ்ரீ நகரில் ஒரு கோடியே 36 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் எல்.பி.ஜி. எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் தற்போது துவக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை கைவிட கோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தங்களது கோரிக்கை தொடர்பாக பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்து விட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்