"மத்திய அரசு பணிகளில் 2% தமிழர்களே தேர்வாகின்றனர்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருத்தம்

Update: 2023-01-18 13:56 GMT

Full View

மத்திய அரசு பணிகளில் தமிழகத்தை சேர்ந்த 2 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெறுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்... சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில கல்லூரியில் தொழிலாளர் நலன் மறும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் போட்டித் தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அமைச்சர் சி.வி.கணேசனும் பங்கேற்றார். அப்போது மத்திய அரசு பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் தேர்வாகாதது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவலை தெரிவித்தார்.





Tags:    

மேலும் செய்திகள்