மக்களின் குறைகளை கேட்காமல் செல்போன் பேசிய அலுவலர்..நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-05-03 02:00 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்பாடியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி சேர்மன் சத்தியமூர்த்தியை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சத்தியமூர்த்தி உறுதி அளித்தார். ஆனால், கூட்டத்துக்கு வந்திருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகன், மக்களின் குறைகளைக் கேட்காமல் வெளியே நின்று கொண்டு செல்போன் பேசிக்கொண்டிருந்ததால், கூட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். அவர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்