வீடியோ வெளியீட்டு திருமணமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை |

Update: 2023-01-25 22:50 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், திருமணம் முடிந்து ஓராண்டு ஆன நிலையில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ராகவேந்தர் என்பவரின் மனைவி அபிராமி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், உடற்கூராய்வுக்காக அவரது சடலம் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. அபிராமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குற்றஞ்சாட்டிய தந்தை, சகோதரி உள்ளிட்டோர், சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், உடற்கூராய்வு செய்யக்கூடாது என பிரேத அறையில் புகுந்து, உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, மாமியார், நாத்தானார் கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக, அபிராமி வீடியோ வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்