லுக் அவுட்நோட்டீஸ் குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

Update: 2023-06-13 01:53 GMT

குஜராத் மாநில போலீசார் தேடிவந்த இளைஞர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து கொழும்பு செல்ல இருந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அகமதாபாத்தை சேர்ந்தவர் ஆசிஷ் குஹா ராய் என்பவரது ஆவணங்களை சோதனை செய்த போது, போலி பாஸ்போர்ட், ஆவணங்கள் தயாரித்தல் உட்பட 7 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீனம்பாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், குஜராத் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்