"வங்கிக்கணக்குடன் ஆதார் இணைப்பு அவசியம்" வேளாண்மை உழவர் நலத்துறை வேண்டுகோள்

Update: 2023-01-12 02:16 GMT

தமிழ்நாட்டில் "பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி'' திட்டமானது 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவி தொகையாக ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, 3 தவணைகளாக 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிதியை பிரதமர் மோடி, ஒட்டு மொத்தமாக நாடு முழுவதும் விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாக வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், நடப்பாண்டு நிதியை பெறுவதற்கு வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்