கொலம்பியாவில் கனமழையால் திடீர் மண் சரிவு - 33 பேர் மரணம்

Update: 2022-12-06 06:11 GMT

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளனர். ரிசாரல்டா நகரில் உள்ள பீப்லோ ரிகோ பகுதியில் பெய்த கனமழையால், மன்சரிவு ஏற்பட்டது.

இதில், சாலையில் சென்ற வாகனங்கள் மண்ணில் புதைந்தன. இந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான மேலும் பலரை தேடி வருகின்றனர். மீட்புப் பணியில், தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்