"நானும் இந்து தான்" - கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பேச்சு

Update: 2023-01-29 02:57 GMT

தன்னை இந்து என்று அழைக்க விரும்புவதாக கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார்

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்து சமய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர் ஆரிப் முகமதுகான், இந்து என்பது இந்த நாட்டில் பிறந்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல் என்றும், இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள் என்றும் கூறினார்.

அது மத அடிப்படையில் இல்லை என கூறிய அவர், பிரதேசத்தின் அடிப்படையில் அழைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே பிபிசி ஆவணப்படம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, ஆங்கிலேயர்களின் அட்டூழியங்களைப் பற்றி ஏன் ஆவணப்படம் எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்

Tags:    

மேலும் செய்திகள்