பூந்தமல்லியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு - ஆவின் மோர், முழு பழங்களை கொடுத்து அசத்திய அமைச்சர்

Update: 2023-04-23 15:12 GMT

பூந்தமல்லியில் தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலில், பொதுமக்களுக்கு ஆவின் மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், திமுக சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன. பூந்தமல்லி நகர திமுக சார்பில், குமணன்சாவடி பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு ஆவின் மோர் மற்றும் முழு தர்பூசணி, கிர்ணி பழம், வெள்ளரிக்காய், இளநீர் ஆகியவற்றை முழு பழங்களாக கொடுத்து அசத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்