தமிழகத்தில் கோலாகலமாக நடந்த சொர்க்கவாசல் திறப்பு விழா... - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2023-01-03 11:48 GMT

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்கவாசல் திறப்பு நடந்தது. தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ரத்ன அங்கி அணிந்து கொண்டு, பாண்டியன் கொண்டையுடன் ஸ்ரீ ரங்கநாதராக பக்தர்களுக்கு காட்சி அளித்தவாறு ஸ்ரீதேவி பூதேவியுடன் அத்திகிரி மலையில் இருந்து இறங்கி கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் உள்ள ஆதி திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் ரங்கராஜ பெருமாளாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதியில் வீதி உலா வந்தார்.

இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக் கரையோரங்களில் அமைந்துள்ள நவதிருப்பதி கோயில்களில் சொா்க்கவாசல் திறப்பு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்