பல்கலைக்கழகத்தை சுத்துப்போட்ட யானைகள் - மரண பீதியில் மாணவர்கள் - பரபரப்பு காட்சிகள்

Update: 2022-09-30 15:23 GMT

5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பாரதியார் பல்கலைக்கழக வளாகம் அருகே சுற்றி திரியும் நிலையில், யானைகளை காட்டு பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

பாரதியார் பல்கலைக்கழக பின்புற வளாகத்துக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் சுற்றி திரிந்துள்ளது. இதனால் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் பயந்து பீதி அடைந்தனர். மேலும், இது குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதே பகுதியில் யானைகள் முகாமிட்டு இருந்ததால் வனத்துறையினர் யானைகளை விரட்ட முடியாமல் திணறினர். இந்நிலையில், மீண்டும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் வராமல் தடுக்க 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பாரதியார் பல்கலைக்கழகம் அருகே முகாமிட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்