கூட்டம் கூட்டமாக வரும் யானைகள்..... வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையை கடந்த நிலையில், எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Update: 2022-06-02 03:38 GMT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையை கடந்த நிலையில், எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள், பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதிக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு, மீண்டும் வனப்பகுதி வழியாக, தெங்குமரஹாடா செல்லும் தார் சாலையை கடந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்த நிலையில், எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்