மாயமான பள்ளி மாணவி எங்கே..? - 3 நாட்களாகியும் விலகாத மர்மம்...

Update: 2023-01-12 06:06 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் மாயமான நிலையில் அவரை மீட்டுத்தரக்கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா கெண்டிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி பரமசிவம். இவரின் 14 வயதான மகள் கடந்த சனிக்கிழமை இரவு மாயமானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் விரக்தியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் செம்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்