இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கை வந்த சீன உளவு கப்பல்.. இலங்கை எம்.பி. கூறிய தகவல்.!!

Update: 2022-08-19 04:32 GMT

இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கை வந்த சீன உளவு கப்பல்.. இலங்கை எம்.பி. கூறிய தகவல்.!!


இந்தியாவுடனான உறவை இலங்கை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது என இலங்கை எம்.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவின் உளவுக் கப்பல் இலங்கையின் அம்பந்தோட்ட துறைமுகம் வந்துள்ளது. இந்தக் கப்பல் பிரச்சினைக்குரியதாக கூறப்படும் நிலையில், சீனாவுடன் இலங்கையின் முந்தைய அரசு நெருக்கமாக இருந்த‌து தெளிவாகியுள்ளதாக அந்நாட்டு எம்பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நெருக்கடியான சூழலில் பல உதவிகளை செய்து வரும் இந்தியாவின் உறவை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளதாக கொழும்புவில் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்