காதலியின் BOY BESTIE மீது தீ பற்ற வைத்த காதலன் - சென்னையில் பரபரப்பு

Update: 2022-11-16 13:15 GMT

வியாசர்பாடியில் வசித்து வருபவர் ராஜேஷ்.

இவர் புளியந்தோப்பில் உள்ள ஆடு தொட்டியில் ஆடுகளை பராமரிக்கும் வேலையை செய்து வந்துள்ளார்.

இவர் தன் வேலையை முடித்து விட்டு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மினி வேன் ஒன்றில் தூங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது வந்த மர்ம நபர் ஒருவர் அவர் மீது தீயை பற்ற வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.

தீக்காயமடைந்த ராஜேஷ் அருகில் இருந்த உரிமையாளரை எழுப்பி தன்னை காப்பாற்ற சொல்லி கத்தியுள்ளார்.

இதன் பின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராஜேஷ் அனுமதிக்கப்பட்டார்.

புகாரின் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள சிசிடிவியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், வியாசர் பாடியை சேர்ந்த பஷீர் என்பவரை போலீசாரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பஷீர் அதே பகுதியை சேர்ந்த ஹாஜிரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இதனை அந்த பெண்ணின் பெற்றோரிடம் கூறி திருமணம் செய்து வைக்க கேட்ட போது அவர்கள் மறுத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ராஜேஷ் உடன் ஹாஜிரா நெருங்கி பழகியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்து அவரை தீ வைத்து கொலை செய்ய முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்