திருச்சி ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்| வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என தொலைபேசி மூலமாக மிரட்டல் அழைப்பு வந்தது. இதனையடுத்து மோப்பநாய் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் ஏதும் சிக்காததால் போலீசார் நிம்மதியடைந்தனர். இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த போதை ஆசாமி பழனிச்சாமி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்