பாஜக கவுன்சிலரின் கணவர் மீது தாக்குதல்...திமுக - பாஜகவினர் இடையே கடும் வாக்குவாதம்

Update: 2022-11-25 02:44 GMT

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில், திமுகவினர் தாக்கியதாக பாஜகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது, இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த செல்வாம்பால் உள்ளார். பேரூராட்சியில் முறைகேடு நடப்பதாக பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.

இதனால் செல்வாம்பால் தரப்பினர், பாஜக கவுன்சிலர் சத்யாவின் கணவர் சிவசங்கரை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்