புது மாதிரியான சண்டை - போட்டி போட்டு போலீசில் புகாரளிக்கும் அஜித் - விஜய் ரசிகர்கள்

Update: 2022-12-01 01:54 GMT

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவதாக போலீசாரிடம் அஜித், விஜய் ரசிகர்கள் பரஸ்பரம் புகார் அளித்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்கள் திரைக்கு வரும் நிலையில், அஜித், விஜய் ரசிகர்கள் போட்டி போட்டு படங்களை பிரபலப்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தங்களது வாகனங்களில் அஜித், விஜய் போஸ்டர்களை ஒட்டி ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் இணையத்தில் வாரிசுவா? துணிவா?என மல்லுக்கட்டி வரும் ரசிகர்கள், தற்போது வாகனங்களில் ஒட்டப்படும் விளம்பர போஸ்டர்களில் விதிமீறல் உள்ளதாக பரஸ்பரம் புகார் அளித்து வருகின்றனர்.

புகார்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டதாக குறிப்பிட்டுள்ள போக்குவரத்து போலீசார், விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்