காடை ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!! ஆரணியில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் சம்பவம்

Update: 2022-08-17 11:55 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் எதிரில் மதுரை பாண்டியன் ஓட்டல் இயங்கி வருகிறது.. இந்த ஓட்டலில் மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் சாப்பிட வந்துள்ளார். காடை ஆர்டர் செய்த அந்த நபர் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென அதில் புழு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே ஓட்டல் நிர்வாகத்திடம் இதுகுறித்து கேட்ட போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக அந்த நபர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் அளித்த நிலையில் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சமீப காலமாக ஆரணியில் உள்ள ஓட்டல் உணவுகள் தொடர்பாக புகார்கள் அதிகம் வெளிவரும் நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

Tags:    

மேலும் செய்திகள்