திடீரென தடம் புரண்ட கார்... 60 அடி கிணற்றில் விழுந்த பயங்கரம் - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2022-12-25 03:36 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் கார் விழுந்த சம்பவத்தில் காரில் இருந்த 3 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

கேத்தாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த நந்தகுமார் ராமச்சந்திரன், சுந்தர், ஆகியோர் தங்களது உறவினர் இறப்பிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை, இழந்து சாலையின் ஓரம் இருந்த 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது. முன்னதாக 3 பேர் கார் கண்ணாடியை உடைத்து வெளியே வந்தனர்.

இது குறித்து தகவலறிந்த நாட்றம்பள்ளி தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி பொக்லைன் இயந்திரம் மூலம் காரை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்