அரணாக நின்ற 50 போலீசார்.. அரண்டு போன சாத்தான்குளம் ஸ்டேஷன் - சூடு தணியாத ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலை

Update: 2023-06-23 03:38 GMT

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க அவகாசம் கோரிய மனு மீதான விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்தி வைத்துள்ளது.

சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தநிலையில் , கடந்த ஆண்டு, ஜெயராஜ் மனைவி செல்வராணி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் . அதில் , வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ள போலீசார் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால், சாட்சிகளை மிரட்ட வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். எனவே மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இதற்கிடையே, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு, மேலும் 4 மாத கால , கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிடக்கோரி மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை வரும் 27ம் தேதிக்கு உயர்நீதின்ற மதுரைக் கிளை ஒத்தி வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்