கொரோனா வார்டில் ருசிகர சம்பவம் - கொரோனா பாதிக்கப்பட்ட முதியவர்கள் திருமணம்
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியோர், கொரோனா வார்டிலேயே திருமணம் செய்து கொண்ட சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியோர், கொரோனா வார்டிலேயே திருமணம் செய்து கொண்ட சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 70 வயதான பெர்னான்டோ என்பவரும், 62 வயதான ரோசாரியா என்பவரும் 14 ஆண்டுகளாக, திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மேட்ரிட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைப் பெற்றுவரும் வார்டிலேயே, மோதிரத்தை மாற்றி திருமணம் செய்து உள்ளனர்.