"பிரபாகரனின் குடும்ப உறுப்பினர் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை" - இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா பேச்சு

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடைய குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் இறுதிப்போரில் கண்டுபிடிக்கப்படவில்லை என இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்து உள்ளார்.

Update: 2020-10-07 07:48 GMT
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது பிரபாகரனின் குடும்பத்தை அப்பாவியாக நினைக்க வேண்டாம் என்று அவர் குற்றம் சாட்டினார். இறுதிப்போரில் பிரபாகரன் மற்றும் அவரது மூத்த மகனின் உடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஏனைய குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறினார். போரில் பிரபாகரனின் குடும்பமே அழிந்தது என்றும் பொன்சேகா இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்