இலங்கை படகை இந்திய மீனவர்கள் மூழ்கடித்ததாக புகார் - இந்திய விசைப்படகு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இலங்கை படகை முட்டி மூழ்கடித்த இந்திய விசைப்படகு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2020-09-18 17:41 GMT
இலங்கை படகை முட்டி மூழ்கடித்த இந்திய விசைப்படகு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். பருத்தித்துறை கடல் பகுதியில் பிளாஸ்டிக் படகில் மீன்பிடித் தொழில் செய்து கொண்டிருந்த போது , தங்கள் படகை மூழ்கடித்த இந்திய மீனவர்களால் தங்கள் நடுக்கடலில் தத்தளித்து உயிருக்கு போராடியதாக இலங்கை மீனவர்கள் 3 பேர் புகார் அளித்துள்ளனர்.மற்றொரு படகில் ஏறி உயிர் தப்பிய அவர்கள் , நடந்த சம்பவம் குறித்து மீனவர் சங்க பிரதிநிதிகள் மூலம் இலங்கை கடற்படை மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். எல்லை மீறி வரும் படகு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்