சமூக வலைதளம் மூலம் பிரதமர்கள் உரை : சமோசா தயாரித்து பதிவிட்ட ஆஸ்திரேலிய பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும், சமூக வலை தளமான டிவிட்டர் மூலம் உரையாடினர்.

Update: 2020-05-31 12:25 GMT
பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும், சமூக வலை தளமான டிவிட்டர் மூலம் உரையாடினர். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்டாட் மோரிசன், தமது வீட்டில் சமோசாக்கள் மற்றும், மாம்பழ சட்னியை தயார் செய்து அதனை புகைப்படமாக டிவிட்டரில் பதிவேற்றியுள்ளார். பின்னர், இந்த வாரம் நரேந்திர மோடி உடன் வீடியோ லிங்க் மூலம் சந்திப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் மோடி, இந்திய சமோசாவால் ஒன்றுபட்டு, இந்தியப் பெருங்கடலால் இணைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். COVID-19 க்கு எதிராக ஒரு தீர்க்கமான வெற்றியை அடைந்தவுடன், ஒன்றாக சுவைப்போம் என, பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த உரையாடல் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்