உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்வு : 23,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு

சிங்கப்பூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது.

Update: 2020-05-11 11:17 GMT
சிங்கப்பூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நாளில் மேலும் 876 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக கூறியுள்ளது. இதன்மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 336 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்