ஈராக் அரசுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம் : துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழப்பு

ஈராக் உள் விவகாரத்தில் அன்னிய நாடுகளின் தலையீட்டை கண்டித்து, அந்நாட்டு அரசுக்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக மக்கள் போராடி வருகின்றனர்.

Update: 2019-11-05 02:51 GMT
ஈராக் உள் விவகாரத்தில் அன்னிய நாடுகளின் தலையீட்டை கண்டித்து, அந்நாட்டு அரசுக்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக மக்கள் போராடி வருகின்றனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தலைநகர் பாக்தாத்தில், மிகக் கடுமையான வன்முறை வெடித்தது. ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை கலைப்பதற்காக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்