எல்லையில் அத்துமீறி பாக். படைகள் தாக்குதல் : பாகிஸ்தானுக்கு பதிலடி தந்த இந்திய ராணுவம்

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

Update: 2019-09-08 04:17 GMT
எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், ஷாபூர் செக்டாரில் தாக்குதலில் ஈடுபட்டனர். உடனடியாக இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். எனினும், இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் குறித்தோ, உயிரிழந்தவர்கள் குறித்தோ எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
Tags:    

மேலும் செய்திகள்