தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவு

தென் அமெரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2019-05-26 17:28 GMT
தென் அமெரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவான இந்த பூகம்பத்தின் தாக்கம் அந்நாடு முழுவதும் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் உடனடியாக தங்கள் வீடுகளை விட்டு ஒட்டம் பிடித்தனர். இந்நிலையில் நிலநடுக்கத்தால் அங்குள்ள பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதை தொடர்ந்து, இக்கிவிட்டோஸ், தராபோட்டா உள்ளிட்ட நகரங்கள் இருளில் மூழ்கின. இந்த நிலநடுக்கத்தால் பெரும் கட்டிட சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. இதனிடையே அந்நாட்டில் எசியோ ஒலிவா என்ற பாடகரின் இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டது படம்பிடிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்