"முன்கூட்டியே புலனாய்வு அமைப்பு எச்சரித்தது" - இலங்கை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தகவல்
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு, இலங்கையில் பல இடங்களிலும் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்தது குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்தது என்பதை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு, இலங்கையில் பல இடங்களிலும் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்தது குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்தது என்பதை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார். தாக்குதல் திட்டம் குறித்து முன்கூட்டியே புலனாய்வு பிரிவு அறிவுறுத்தி இருந்ததாகவும், இது குறித்த ஆவணங்கள் உண்மை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை புறக்கணித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஹரீனின் இந்த தகவல்கள் இலங்கை அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.