இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - "இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது" : வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, இலங்கையில் உள்ள இந்திய தூதரிடம் கேட்டறிந்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, இலங்கையில் உள்ள இந்திய தூதரிடம் கேட்டறிந்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை குண்டு வெடிப்பு நிலவரத்தை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக தொடர்பு கொள்வதற்காக இந்திய தூதரகம் உதவி எண்களை தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு குண்டுவெடிப்பு தொடர்பான விவரங்களையும், உதவிகளையும் பெறலாம் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.
உதவி எண்கள்
94777903082, 94112422788, 94112422789