இலங்கைக்கு 400 மில்லியன் டாலர் இந்தியா நிதி

நிதி உதவிக்காக எதையும் விட்டுத்தர முடியாது - ரணில்

Update: 2019-01-11 04:30 GMT
அரசியல் குழப்பத்தால் அதிகரித்த கடன்சுமைகளை அடைக்க நாளாகும் என்றும், அது முந்தைய அரசு ஏற்படுத்திய கடன் என்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்நாட்டு  நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை மீட்க இந்தியா உதவி வருவதை சுட்டிக்காட்டினார். இலங்கைக்கு 400 மில்லியன் டாலர் அளவுக்கு இந்தியா நிதி உதவி அளித்தாலும், தங்கள் நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது என்றார். இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, தற்போது  அதிக கடன் இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க வேதனை தெரிவித்தார், 
Tags:    

மேலும் செய்திகள்