தேவாலயத்துக்குள் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் - பிரார்த்தனை செய்த 5 பேர் பலி

பிரேசிலின் சாவோ பவுலோ நகர் அருகே உள்ள காம்பினாஸ் என்ற இடத்தில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் மர்ம நபர் புகுந்து துப்பாக்கியால் சுட்டார்.

Update: 2018-12-12 05:27 GMT
பிரேசிலின் சாவோ பவுலோ நகர் அருகே உள்ள காம்பினாஸ் என்ற இடத்தில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் மர்ம நபர் புகுந்து துப்பாக்கியால் சுட்டார். பிரார்த்தனையில் இருந்தவர்களை நோக்கி சுமார் 20 முறை அந்த நபர் சரமாரியாக சுட்டதில், 5 பேர் தேவாலயத்துக்குள்ளேயே உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீசார் வருவதற்குள், அந்த நபரும், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். முதல்கட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர், ஐடிநிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் என தெரிய வந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்