"அதிபருக்கு எதிரான புகாருக்கு ஆதரவில்லை" - தமிழ் முற்போக்கு கூட்டணி தகவல்
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிரான குற்றவியல் புகாருக்கு ஆதரவு வழங்க போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிரான குற்றவியல் புகாருக்கு ஆதரவு வழங்க போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நிலவும் நெருக்கடி நிலைக்கு மேலும் வலு சேர்க்க விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.