"சென்னை மாநகராட்சியில் அனுமதியின்றி.." - மேயர் பிரியா விடுத்த எச்சரிக்கை

Update: 2023-09-30 02:26 GMT

சென்னை மாநகராட்சியில் அனுமதியின்றி கேபிள் லைன் போடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். பல கேபிள் நிறுவனங்கள் உரிமம் இன்றி இயங்கி வருவதாகவும், மாநகராட்சியிடம் அனுமதியின்றி லைன் போடுவதாகவும் கூறிய அவர், அவற்றை நீக்க அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். இதன் பணிகள் முக்கிய சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வரும் காலங்களில் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்